search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனாமி குடியிருப்பு"

    • ரெயில்வே பொதுமேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை
    • கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி ஏற்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வந்த திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட பொது மேலாளரிடம் கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா திருத்தல பங்குத்தந்தை அல்காந்தர் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் இக்பால் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைமனு ஒன்றை கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி சுனாமி ஏற்பட்டபோது கடற்கரை பகுதியில் இருந்த ஏராளமான மீனவர் குடியிருப்புகள் பாதிக்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு வடக்கு புறம் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 700-க்கும் மேற்பட்ட சுனாமி குடியி ருப்புகள் கட்டப்பட்டன.

    இந்தப் பகுதியில் 5 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் கன்னியாகுமரி யின் பிரதான பகுதிக்கு வருவதற்கும் இவர்கள் தொழில் செய்வதற்காக சின்னமுட்டம் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு செல்வதற்கும் ரெயில்வே நிலையத்தை ஒட்டிஉள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருவதால் இந்த பாதையை தங்களுக்கு சீரமைத்து தருவ துடன் அந்தப் பாதையை பயன்படுத்து வதற்கு உரிய அனுமதியும் வழங்க வேண் டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    ×